* பட்டப்படிப்பு முடித்தவர்கள் விமானப்படையில் சேர்ப்பு

Posted On Monday, June 17, 2013 by Admin 0 comments

விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு முடித்த ஆண்–பெண் இருபாலருக்கும் வாய்ப்புகள் உள்ளன.


இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய விமானப்படைக்குத் தகுதியானவர்கள் பல்வேறு சிறப்பு நுழைவின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். தற்போது பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவு பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

பல்வேறு நுழைவுத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் இவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த பொது தேர்வின் அடிப்படையில் 14–வது சாட் சர்வீஸ் கமிஷன் கோர்ஸ், 85–வது ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர்ஸ் கோர்ஸ் (பெர்மனன்ட் கமிஷன்), 57–வது சாட் சர்வீஸ் கமிஷன் கோர்ஸ், 136–வது கிரவுண்ட் டியூட்டி ஆபீசர்ஸ் கோர்ஸ் (பெர்மனன்ட் கமிஷன்), 29–வது சாட் சர்வீஸ் கமிஷன் கோர்ஸ் ஆகிய நுழைவுத் திட்டங்களுக்குத் தகுதியான ஆண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதேபோல 43–வது சாட் சர்வீஸ் கமிஷன் கோர்ஸ், 57–வது சாட் சர்வீஸ் கமிஷன் கோர்ஸ், 45–வது சாட் சர்வீஸ் கமிஷன் கோர்ஸ் ஆகிய நுழைவுத் திட்டத்தில் பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேவையான எண்ணிக்கையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்–2 மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன.

நுழைவுத் தேர்வின் பெயர் : ஏர்போர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட் ஜூலை–2013

வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1–7–2014 தேதியில் 19 வயது பூர்த்தி அடைபவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2–7–1991 மற்றும் 1–7–1995 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அவர்கள் பட்டப்படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பிளஸ்–2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை உள்ளடக்கிய பிரிவை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது பி.இ. மற்றும் பி.டெக் 4 ஆண்டு பட்டப்படிப்பை அனைத்து பாடங்களிலும் 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 உடற்தகுதி
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ. உயரமும் அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். கால் உயரம் குறைந்தபட்சம் 99 செ.மீ முதல் 120 செ.மீ. வரை இருக்கலாம். உட்கார்ந்த நிலையில் உயரம் குறைந்தபட்சம் 81.5 செமீ முதல் 96 செ.மீ. வரை இருக்கலாம்.

பார்வைத்திறன் 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் இருக்கலாம். கண்களில் வேறு பாதிப்புகள் இருக்கக்கூடாது.

தேர்வு செய்யும் முறை

ஏர் போர்ஸ் செலக்சன் போர்டு தகுதியானவர்களை தேர்வுக்கு அழைக்கும். ஸ்டேஜ்–1 தேர்வு முறையில் நுண்ணறிவுத் திறன் சோதிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஸ்டேஜ்–2 தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் உடற்திறன் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் நடைபெறும். இந்த தேர்வுகள் மட்டும் 4 நாட்கள் நடைபெறும். பிளையிங் பிரிவுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பைலட் தேர்வு (பி.பி.பீ.டி.) நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் விமானப் படையின் இணையத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். புகைப்படம் 250 கே.பி. அளவுக்குள் இருக்கும்படி ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்தபின் 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 7–7–2013
தேர்வு நடைபெறும் நாள் : 25–8–13
மேலும் விவரங்களை www.careerairforce.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Thanks
Dailythanthi


* தெருமுனைக்கூட்டம் 14-06-2013

Posted On Sunday, June 16, 2013 by Admin 0 comments

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 14-06-2013 (வெள்ளிக்கிழமை) மாலை மஃரிப்புக்கு பிறகு கிழக்கு தெற்குத் தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது, 

இதில் சகோதரர் முஹம்மது ஜூம்ஆ (மாணவரணி) அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நற்பணிகள் என்ற தலைப்பிலும், 

ஆலிமா ஷாஃபியா அவர்கள் வரதட்சனை ஓர் மானக்கேடு என்ற தலைப்பிலும், 

இமாம் முஹம்மது சித்தீக் அவர்கள் இஸ்லாமும் இணைவைப்பும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்,

இதில் சகோதர, சகோதரிகள் திரளாக கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்....



















* தமிழகத்தில் ஷாஃபான் மாதம் ஆரம்பம் – 2013

Posted On Sunday, June 16, 2013 by Admin 0 comments

பிறை தேட வேண்டிய நாளான ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் ரஜப் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஜூன் 10 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிலிருந்து ஷாஃபான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்



* வலி நிவாரணி 'டெக்ஸ்ட்ரோப்ரோபாக்ஸிபீன்' மாத்திரைக்கு மத்திய அரசு தடை

Posted On Friday, June 14, 2013 by Admin 0 comments

டெல்லி: வலி நிவாரண மாத்திரையினால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி அதனை உற்பத்தி செய்யவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

டெக்ஸ்ட்ரோ ப்ரோபாக்ஸிபீன் (Dextropropoxyphene) என்ற பெயர் கொண்ட அந்த வலி நிவாரணி மாத்திரை 1957ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 


இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஹைபோ டென்சன், இதயவலி உள்ளிட்ட பல்பேறு பக்க விளைவுகள் ஏற்பட்டன. ஏராளமானோர் மரணத்தை தழுவியது கண்டறியப்பட்டது. இதனால் இந்த வலி நிவாரண மாத்திரையை பல நாடுகள் தடை செய்துவிட்டன. 

பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கூறி உலகின் பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் தற்போது அதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இந்த மாத்திரையை விற்கவோ, உற்பத்தி செய்யவோ, வினியோகிக்கவோ கூடாது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட வலி நிவாரணிகள் 
இதேபோல் சளி, இருமல் போன்றவற்றுக்கு கொடுக்கப்பட்ட பீனைல் புரப்பனோலெமைன்(பி.பி.ஏ.,), பல்வேறு வலிகளை போக்குவதற்காக கொடுக் கப்பட்டு வந்த "பெயின் கில்லர்' மருந்துகளான நைஸ், நிமுலிட் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

மேலும் இரைப்பை நோய்களுக்கு கொடுக்கப்படும் இப்சிநார்ம், டிகாட், டிஜிப்ஸ், பாக்டீரியாவை அழிக்க அளிக்கப்படும் கெயிட்டி உள்ளிட்ட மருந்துகள் பக்க விளைவை ஏற்படுத்துகின்றன, என சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் தெரிவித்ததை அடுத்து அந்த மருந்துகளுக்கு கடந்த 2009ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thanks
One india


* TNTJ மாணவரணியின் இலவச சேவை - கல்வி உதவித்தொகை பெற

Posted On Thursday, June 13, 2013 by Admin 0 comments

தமிழக அரசு சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள்;, புத்தமதத்தினர்) மாணவ, மாணவியர்களுக்கு 2013 - 2014 ஆம் ஆண்டிற்கான  கல்வி உதவித் தொகையை அரசு அறிவித்துள்ளது.

1. இதில் மாணவியர்களுக்கு 30% இட ஒதுக்கீடு

2. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் மற்றும் ITI, DIPLOMA, DIPLOMA IN NURSING, ITC, NCVT, 12TH VOCATIONAL GROUP, UG, PG, M.PHIL, PH.D, MBBS, BE, ME, B.TECH, ARCHITECTURE, BL  மற்றும் ஆசிரியர் பயிற்சி என்று எல்லா துறை மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

3.இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

4.ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 நபர்களுக்கு மட்டும்வழங்கப்படும்


SCHOLARSHIP FORM கிடைக்கும் இடங்கள்

1. தவ்ஹீத் (TNTJ ) மர்கஸ்  (ஜமாலி நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில்)
2. தவ்ஹீத் அழைப்பு மையம் & நூலகம் (கிழக்கு மெயின்ரோடு, பழைய சுகம் மெடிக்கல் வளாகம்). 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை, மாணவர் அணி சார்பாக SCHOLARSHIP சம்பந்தமான அனைத்து உதவிகளும் கடந்த ஆண்டைப்போல் இவ்வாண்டும் செய்துத் தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு : 9171619660, 9500275474


என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லெப்பைக்குடிக்காடு கிளை 
மாணவர் அணி.






* தோல் முதல் விதை வரை பலன் தரும் பப்பாளி

Posted On Wednesday, June 12, 2013 by Admin 0 comments

பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், கண் பார்வையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கும் பப்பாளி பழம் நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் முதல் 2 மாதங்களுக்கு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும், குடல் பூச்சிகளைச் அழித்து சுத்தம் செய்யும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

பப்பாளியை தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

தோளில் ஏற்படும் தொற்றுக்களுக்கும், காயங்களுக்கும் பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. அடிபட்ட இடத்தில் பப்பாளிப் பழச் சாறை தடவினால், வீக்கத்தைக் குறைக்கலாம்.

5 மாதத்தைக் கடந்த கர்ப்பிணிப் பெண்கள், சிறிய துண்டு பாப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. பப்பாளி கலந்த ஷேம்புக்களையும் பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் பிரச்னைகளுக்கு பப்பாளிக் காய் நல்ல பலன் தரும்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்ற பப்பாளி அருமருந்தாகும். வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு பப்பாளி சாப்பிட்டால், குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளும் அகற்றப்படும்.

அடிக்கடி சளி, இரும்பல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

பப்பாளி பழத்தின் தோல் முதல் விதை வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது.


* ரான்பாக்சி மருந்துகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Posted On Tuesday, June 11, 2013 by Admin 0 comments

டெல்லி: தரமற்ற பொருட்களைக் கொண்டு மருந்துகளை தயாரிப்பதாக பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்சி மீது உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளது. 



நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, ரான்பாக்சி. சில தினங்களுக்கு முன், கலப்பட மருந்துப் பொருட்களை விற்பனை செய்ததற்காக, அமெரிக்க உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகம், ரான்பாக்சி நிறுவனத்திற்கு, 500 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது. இதையடுத்து, மும்பையின் பிரபல மருத்துவமனைகள், ரான்பாக்சி மருந்துகளை பரிந்துரைப்பதை குறைத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் எழுத தடை 
ரான்பாக்சியின் தயாரிப்புகள் மற்றும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள பொருட்களில், ஆய்வு நடத்த, இந்திய மருத்துவக் கழகம், இந்திய மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.ரான்பாக்சி நிறுவனம், தன் தரத்தை உறுதிப்படுத்தும் வரை, தமிழ் நாட்டில், அந்நிறுவன மருந்துகளை பரிந்துரைப்பதை குறைத்துக் கொள்ளுமாறு, இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழ்நாடு பிரிவு, டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


தடை விதிக்க மனு 
இந்த நிலையில் ரான்பாக்சி நிறுவனம் மருந்துகளுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தரக்குறைவான பொருட்களை கொண்டு ரான்பாக்சி நிறுவனம் மருந்துகளை உற்பத்தி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ரான்பாக்சி மருந்துகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும். 

Thanks
Oneindia


* நல்ல கல்லூரி எது? எவ்வாறு தேர்வு செய்வது?

Posted On Tuesday, June 11, 2013 by Admin 0 comments

மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.

கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில..........

நிர்வாகம்
கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள்
சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது M.Phil, M.Tech, Phd, போன்ற கல்வித்தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகாரம்
தேர்ந்தெடுக்கும் கல்லூரி, மத்திய, மாநில அரசுகளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.

உள்கட்டமைப்பு வசதிகள்
தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

கல்லூரியின் பிரபலம்
புகழ் பெற்ற கல்லூரியில் படிப்பது, சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும். கடந்த ஆண்டு கல்லூரியின் மொத்த தேர்ச்சி விகிதத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு
தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறதா? என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். அதிலும் குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.

பாடத்திட்டங்கள்
ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அம்சங்கள்தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல்.

இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வசந்தமாக்கவும்.

கட்டணம்
கட்டணங்களை பொறுத்தவரை சிலர் அட்மிஷனின் போதே முழு செமஸ்டருக்கான பணம் மற்றும் ஹாஸ்டல் கட்டணம் போன்ற மற்றக்கட்டணங்களையும் சில்ர் செலுத்தி விடுகின்றனர். ஆனால் கல்லூரி எதிர் பார்த்த அளவில் இல்லாவிட்டாலோ, அல்லது அதைவிட நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டாலோ நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தியிருந்தாலும் அதனை திரும்ப பெற முடியாது ஆகவே பகுதி பணம் மட்டும் ஆரம்பத்தில் செலுத்தினால் வீண்விரயத்தை தவிர்க்கலாம்.

பிற வசதிகள்
விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.


Thanks
பயனுள்ள தகவல்கள்
Dinamalar


 

Categories

+2 (16) 10th (12) Air Asia (1) AirIndia Express (1) Education News (19) exam results (8) Jet Airways (1) MBBS (2) Mihin Lanka (1) RSS (2) SpiceJet (3) Tiger Airways (1) UAE (4) V .களத்தூர் (27) ஃபித்ரா (7) ஃபித்ரா விநியோகம் (7) அக்டோபர் 8 (3) அக்பர் நகர் (1) அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி (3) அப்துல் கரீம் (1) அப்துல் மஜீத் உமரி (5) அப்துல் ஹமீத் மஹ்ளரி (1) அம்பல‌வர் கட்டளை (3) அம்மாபாளையம் (1) அரசு சார்ந்த செய்திகள் (22) அரபா நோன்பு (2) அரபாத் நகர் (1) அரியலூர் கிளை (8) அறிவிப்பு (4) அறிவியல் (1) அறிவுப்போட்டி (7) அலிஅக்பர் தெரு (15) அல்தாஃபி (6) அல்ஷா நகர் (4) அவசர இரத்ததானம் (7) அஷ்ரப்தீன் ஃபிர்தவ்சி (2) ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி (2) ஆரோக்கியம் (6) ஆர்ப்பாட்டம் (30) ஆலோசனைகள் (6) ஆலோசனைக்கூட்டம் (4) ஆஷுரா தினம் (4) ஆஷுரா நோன்பு (5) ஆஸ்திரேலியா (1) இஃப்தார் (3) இடஒதுக்கீடு (9) இப்தார் (3) இப்ராஹிம் உமரி (1) இரத்ததான தொடர்பு எண்கள் (1) இரத்ததான முகாம் (3) இரத்ததானம் (22) இரவுத்தொழுகை (3) இறப்புச்செய்திகள் (64) இளைஞர் சந்திப்பு (1) இஸ்லாத்தினை ஏற்றோர் (8) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (16) உணர்வு (4) உதவித் தொகை (1) உரிமை மீட்புப் போராட்டம் (2) எச்சரிக்கை (2) எறையூர் (1) ஏகத்துவம் (4) ஐபோன் (2) ஒலியுல்லாஹ் (1) கச்சிராபாளையம் (1) கணிணி பகுதி (7) கத்தார் (1) கல்லூரி (3) கல்வி உதவி (3) கல்வி உதவித்தொகை (5) கல்வி கருத்தரங்கம் (2) கல்வி செய்திகள் (80) கல்வி நிறுவனங்கள் (12) கல்வி வழிகாட்டி (56) காதியானி (1) காயிதேமில்லத் நகர் (18) கால்நடை மருத்துவம் (3) காவி கும்பல் (1) கிழக்கு ஜமாலி நகர் (1) கிழக்கு தெற்குத் தெரு (15) கிழக்கு நடுத்தெரு (8) கிழக்கு மெயின் ரோடு (6) குடும்ப அட்டை (3) குன்னம் (2) குழந்தைகள் (7) குவைத் (4) கூட்டுக்குர்பானி (6) கேள்வி பதில் நிகழ்ச்சி (5) கேள்வி பதில்? (5) கொளக்கானத்தம் (2) கொள்கை விளக்க பொதுக்கூட்டம் (5) கோடைகால பயிற்சி முகாம் (16) கோவை அப்துர்ரஹீம் (1) கோவை ரஹ்மதுல்லாஹ் (1) சகோதரி யாஸ்மின் (1) சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் (1) சிங்கப்பூர் (1) சிறை நிரப்பும் போராட்டம் (3) சுல்தான் இப்ராஹிம் (1) சுவர்விளம்பரங்கள் (9) சுவாமியப்பநகர் (1) சூப்பர் நகர் (1) செந்துறை (1) சென்னை (3) செல்போன் (5) சேப்பாக்கம் இஸ்மாயில் (2) ஜகாத் (18) ஜனவரி 27 (22) ஜனவரி 4 (4) ஜனவரி 6 (5) ஜாபர் நாச்சியா (1) ஜும்ஆவின் சிறப்புகள் (2) ஜுலை 4 மாநாடு (19) ஜூன் 22 (3) டிப்ஸ் (1) டெங்கு காய்ச்சல் (4) தண்டனைகள் (3) தராவீஹ் தொழுகை (1) தர்பியா முகாம் (10) தலைமைக் கழக அறிவிப்பு (13) தவ்ஃபீக் (1) தாஃவா (19) தாவூத் கைஸ‌ர் (1) திடல் தொழுகை (4) திருக்குர்ஆன் மாநாடு (1) திருச்சி (6) திருப்பூர் அஹமது கபீர் (1) திருமாந்துறை (1) திருமாந்துறை டோல்கேட் (2) திருவள்ளூர் யூசுப் (1) திருவாரூர் (3) தீர்மானங்கள் (2) துஆக்கள் (5) துபாய் (34) துபை (90) துல்ஹஜ் (8) தெருமுனைக்கூட்டம் (8) தெருமுனைப்பிரச்சாரம் (48) தேர்தல் (4) தேர்வு முடிவுகள் (11) தேவையூர் (1) தொடர்பு எண்கள் (1) தொழிற்பயிற்சி (9) தொழில்நுட்ப செய்திகள் (2) தொழில்நுட்ப படிப்பு (10) தொழுகை (7) தொழுதூர் (4) நஜ்மா ஆலிமா (3) நபிவழி திருமணம் (2) நிதி உதவி (2) நிர்வாகம் (18) நுழைவுத்தேர்வு (3) நூலகம் (1) நேரடி ஒளிபரப்பு (7) நோட்டீஸ் (14) நோன்பு (10) பத்திரிக்கைகளில் (13) பயங்கரவாதிகள் (2) பயனுள்ள செய்திகள் (40) பராஅத் இரவு (2) பரிசுகள் (2) பாண்டிச்சேரி சாஜ் (1) பாத பூஜை (1) பாதுகாப்பு விதி (1) பாபர் மஸ்ஜித் (3) பாலியல் (3) பால்வளதுறை (1) பித்அத் (7) பிப்ரவரி 14 (17) பிரார்த்தனை (3) பிறசமய சகோதரர்கள் (4) பிறை (9) பிறை அறிவிப்புகள் (8) பிலால் ரலி தெரு (10) பிஸ்மில்லாஹ் நகர் மர்கஸ் (4) புகாரி (1) புகைப்படங்கள் (24) புதிய கிளை (4) புதிய படிப்பு (2) புதிய மர்கஸ் ஜூம்ஆ (3) புது ஆத்தூர் (15) புத்தகங்கள் (6) பெண் குழந்தைகள் (3) பெண்கள் (11) பெண்கள் பயான் (8) பெரம்பலூர் (63) பெரம்பலூர் கிளை (3) பெருநாள் திடல் தொழுகை (7) பெருநாள் தொழுகை (15) பேச்சு பயிற்சி (3) பேரணி (12) பேரூராட்சி (3) பொதுக்குழு (3) பொதுத் தேர்வு (13) பொதுவான செய்திகள் (29) பொறுப்பாளர் (1) போராட்டம் (16) போலி சாமியார் (3) போலிகள் (9) போஸ்டர் (11) மக்தப் மதரஸா (3) மக்தூம் MISC (1) மதரஸா (4) மதினா ஆலிமா (2) மதுரை (4) மத்திய அரசு வேலை (13) மனாஸ் (2) மரண தண்டனை (4) மருதடி (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குறிப்புகள் (12) மருத்துவ செய்திகள் (13) மருத்துவ முகாம் (1) மருத்துவஉதவி (9) மருத்துவக் கல்லூரி (4) மருத்துவம் (8) மர்கஸ் (17) மழை (4) மழை தொழுகை (2) மவ்லிது (4) மாணவரணி (8) மாணவரணி லெப்பைக்குடிக்காடு (4) மாதாந்திர அமர்வு (40) மாநாடு (6) மாநில நிர்வாகம் (3) மாநில பொதுக்குழு (7) மாநிலப் பொதுக்குழு (2) மார்க்க விளக்க பொதுக்கூட்டம் (6) மார்க்க விளக்கக் கூட்டம் (6) மாவட்ட ஆட்சியர் (1) மாவட்ட செயற்குழு (15) மாவட்ட நிர்வாகம் (1) மாவட்ட பொதுக்குழு (1) மாவட்ட மாணவரணி (1) மாவட்டம் (1) மிஃராஜ் (6) மின் தடை (1) மின்சாரம் (5) மிரட்டல் (1) மிஷால் (1) மீலாது விழா (1) முக்தார் (1) முதலுதவி (1) முதியோர் இல்லம் (1) முபீனா ஆலிமா (3) முஹம்மது சித்தீக் (26) முஹம்மது பட்டிணம் (5) முஹர்ரம் மாதம் (1) முஹைய்யதீன் பாஷா (4) மேற்கு ஒத்தைத்தெரு (5) மேற்கு ஜமாலி நகர் (5) மேற்கு தெற்குத்தெரு (9) மேற்கு நடுத்தெரு (9) மேற்கு மெயின் ரோடு (9) மைனுதீன் (17) மொபைல் (4) மோசடி (10) யாசர் (1) ரங்கநாத்மிஸ்ரா அறிக்கை (1) ரஞ்சன்குடி (1) ரமளான் (12) ரமளான் தொடர் உரைகள் (28) ராஜேந்திர சச்சார் (1) ரேஷன் கார்டு (5) ரோஸ் நகர் (2) லெப்பைக்குடிக்காடு (185) லெப்பைக்குடிக்காடு கிளை (31) லைலத்துல் கத்ர் (3) வரதட்சணை (2) வலியுல்லாஹ் (1) வளைகுடா பகுதி (23) வாக்காளர் (4) வாக்காளர் பட்டியல் (1) வாராந்திர சொற்பொழிவு (2) வாராந்திர பயான் (27) வாராந்திர வகுப்புகள் (3) வாலிகண்டபுரம் (1) வாழ்வாதார உதவி (5) விமான சேவை (6) விருதுகள் (2) விளம்பர பேனர் (3) விவாதம் (12) வீடியோ (102) வீட்டு மருத்துவம் (4) வேலை வாய்ப்பு (43) ஷேக் தாவூத் (2) ஸஃபர் மாதம் (2) ஸாஜிதுர்ரஹ்மான் (1) ஸ்பைஸ்ஜெட் (3) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (1) ஹஜ் (11) ஹஜ்ஜூப்பெருநாள் (3) ஹாஜா மொய்தீன் (1) ஹுசைன் ரலி தெரு (1)